Skip to main content

Posts

Showing posts with the label tamil

ஒரு கவிஞனின் மனக்குமுறல்

குளத்தில் இருக்கும் நீர் ஆவியாகி வானிற்குச் செல்லும் போது எனக்குத் தெரியாது.... அது அழகான மழைத் துளியாக பூமிக்கு திரும்பி வரும் என்று பெண்ணே! நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றதும் அந்த மழைத் துளியைப் போல அழகாகி என்னிடம் திரும்பி வருவதற்கு தானோ? பூக்களில் உள்ள தேனைத் தேனீக்கள்  உறிஞ்சி எடுத்து விடும் என்பதை அறிந்தும்  அந்த பூக்கள் ஒரு நாளும்  தேனினைச் சுரக்க மறுத்ததில்லை. அது போல தான் நீ என்னை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும் உன் மீது அன்பு வைக்க என் மனம் மறுக்க வில்லையோ!

A Letter to the dearest(In Tamil)

மேகங்களில் அவ்வப்போதுதோன்றும் உருவங்கள்.... எனக்கு மடடும்தான் உன் முகம் போல தோன்றுகிறதோ!?  மண்ணில் விழும் மழை சாரலின் ஓசை எனக்கு மடடும்தான் உன் குரல் போல தோன்றுகிறதோ!? உயிரே!...  நீ எங்குள்ளாய்.. அன்று நீ தான் என் உலகம் என்றேன். இன்று உலகில் இருக்கும் அனைத்து உயிர்களிலும் உன்னைக் காண்கிறேன்! உயிரே!.. நீ எங்குள்ளாய்..